sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

44 ரயில் நிலைய பணிகள் இம்மாதம் துவக்கம்

/

44 ரயில் நிலைய பணிகள் இம்மாதம் துவக்கம்

44 ரயில் நிலைய பணிகள் இம்மாதம் துவக்கம்

44 ரயில் நிலைய பணிகள் இம்மாதம் துவக்கம்


ADDED : பிப் 06, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அம்ரித் பாரத் ரயில் நிலைய' திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற புதிய திட்டத்தின் கீழ், படிப்படியாக 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் இரண்டாவது கட்டமாக, 44 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி, இந்த மாதம் இறுதியில் அடிக்கல் நாட்டுகிறார்.

பணிகள் முடிக்கப்பட்டுள்ள, 82 ரயில்வே மேம்பாலங்கள், 117 சுரங்க பாதைகளையும் திறந்து வைக்க உள்ளார்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் முதல் கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடு துறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய, 18 ரயில் நிலையங்கள், 381 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இரண்டாவது கட்டமாக, சென்னை கிண்டி, மாம்பலம், சூலுார்பேட்டை, பரங்கிமலை என தமிழகத்தில், 30 ரயில் நிலையங்கள் உட்பட, தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us