sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வனத்துறையினர் விரட்டும் பணியில் தோய்வு சானமாவு வனத்திற்கே திரும்பிய 45 யானைகள்

/

வனத்துறையினர் விரட்டும் பணியில் தோய்வு சானமாவு வனத்திற்கே திரும்பிய 45 யானைகள்

வனத்துறையினர் விரட்டும் பணியில் தோய்வு சானமாவு வனத்திற்கே திரும்பிய 45 யானைகள்

வனத்துறையினர் விரட்டும் பணியில் தோய்வு சானமாவு வனத்திற்கே திரும்பிய 45 யானைகள்


ADDED : நவ 21, 2025 02:40 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கர்நாடக மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்த, 45க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதி வழியாக, கடந்த இரு தினங்களுக்கு முன், ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன. அவற்றை ஓசூர் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை கெலமங்கலம்,- உத்தனப்பள்ளி சாலை மற்றும் ராயக்கோட்டை சாலையை கடக்க வைத்து, தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது, விருப்பாச்சி நகரில் கூடிய அப்பகுதி விவசாயிகள், யானைகளை தங்கள் பகுதிக்குள் வராதவாறு, சாலையை கடக்க விடாமல் குறுக்கிட்டு, இரவு முழுவதும் காவல் காத்தனர். இதனால் யானைகளை விரட்டும் பணியில் தோய்வு ஏற்பட்டதில், யானைகள் மீண்டும், ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கே திரும்பின. மேலும், காலேப்பள்ளி, காடுலக்கசந்திரம் பகுதியிலிருந்த யானைகளும் இணைந்து, ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. இதனால் வனத்துறையினர், வனப்பகுதியை ஒட்டிய பகுதி விவசாயிகள், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து, யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us