ADDED : ஏப் 26, 2024 01:50 PM

சென்னை: இன்று(ஏப்.,26) முதல் ஏப்., 30 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்.,26 முதல் 30 வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 -5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

