5 மாவட்டங்களில் மிக கனமழை! 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் 'அப்டேட்'
5 மாவட்டங்களில் மிக கனமழை! 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் 'அப்டேட்'
UPDATED : நவ 21, 2024 02:30 PM
ADDED : நவ 21, 2024 02:28 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,21) 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (நவ.,21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.,25ம் தேதி
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நவ.,25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நவ.,26, 27ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.