sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

/

அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

4


ADDED : அக் 01, 2024 01:11 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:11 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மாநகராட்சிகளில் வசிப்போர், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்' என, நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்; இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரியை பொறுத்தவரையில், இரண்டு அரையாண்டுகளில் வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்., 1 முதல் செப்., 30 வரை. இரண்டாம் அரையாண்டு அக்., 1 முதல் மார்ச் 31 வரை.

இதில், அரையாண்டு துவங்கும் முதல் 30 நாளில் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:


தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. எனவே, முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகைகள் வழங்கி வருகிறது.

இந்த இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும்.

அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us