ADDED : செப் 05, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன், 30. இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை வீடு அருகில் கொட்டத்தில் அடைத்து வளர்த்து வருகிறார்.
நேற்று காலை அங்கு சென்று பார்த்த போது 5 ஆடுகள் இறந்து கிடந்தன. இரவில் தெரு நாய்கள் கொட்டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரிய வந்தது. நாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.