sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

/

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

20


ADDED : ஜன 30, 2025 06:30 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:30 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்கு நிலம் தருவோருக்கு, சந்தை மதிப்பை விட, ஐந்து மடங்கு இழப்பீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யும் பணி துவங்கியுள்ளது. வரும் மார்ச் முதல் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையம், டில்லி, தெலுங்கானா ஐதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. இருப்பினும் ஆண்டுக்கு, 2 கோடி பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அதற்கேற்ப விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, போதிய இடம் இல்லை.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதை, பொது - தனியார் கூட்டு முயற்சியில், 29,150 கோடி ரூபாயில், தமிழக அரசு அமைக்கிறது.

பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றிய, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவை. அதில், 3,600 ஏக்கர் தனியார் வசம் உள்ள பட்டா நிலம். மீதி, அரசுக்கு சொந்தமானது.

நிலம் கையகப்படுத்தும் பணியின் முதல் அறிவிப்பு, 2024 பிப்ரவரியில் வெளியானது. தொடர்ந்து, கையகப்படுத்த உள்ள நிலத்தின் உரிமையாளர், நிலத்தின் வகை, அளவு உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதுவரை, 6,000 நபர்களிடம், 3,600 ஏக்கர் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு பணி முடிந்துள்ளது. நிலம் வழங்குவோருக்கு, நிலத்தின் சந்தை மதிப்பைவிட, 3.40 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், சமீபத்தில் பரந்துாரில் மக்களை சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் அரசின் மீது, விஜய் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். எதிர் கட்சிகளும் அரசை விமர்சித்தன.

எனவே, பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் வழங்குவோருக்கான இழப்பீட்டை, சந்தை மதிப்பை விட, ஐந்து மடங்கு கூடுதலாக வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வரும் மார்ச் முதல், நிலம் கொடுத்தோருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us