sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு

/

 கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு

 கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு

 கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு


ADDED : டிச 31, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், கடன் தவணையை முழுமையாக செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல், 5,000 பேர், ஐந்தாண்டுகளாக காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் கடன் பெற்றவர்கள் நிலுவை தொகையை செலுத்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடன் நிலுவையை செலுத்திய, 8,000 பேருக்கு நீண்ட போராட்டத்துக்கு பின், பத்திரங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின், மீண்டும் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் நிலுவை தொகையை செலுத்தினர். ஆனால், அவர்களுக்கு தற்போது வரை பத்திரம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், கடன் நிலுவையை செலுத்திய, 5,000 பேர் பத்திரம் பெற காத்திருக்கின்றனர். வீட்டுவசதி சங்கங்கள், வீட்டுவசதி இணையத்துக்கு இடையிலான பிரச்னைகளே இதற்கு காரணம்.

சங்கங்கள் பெயரில் உள்ள கடன் நிலுவையை, நிர்வாக ரீதியாக மாற்றி அமைத்து, பத்திரங்களை வழங்க இணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இணைய அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியமாக உள்ளனர்.

இதனால், மற்றவர்கள் கடன் நிலுவையை செலுத்த தயங்குகின்றனர். இது சங்கங்களின் நிதி நிர்வாக பணியை பாதிக்கிறது. மக்களுக்கு மட்டுமல்லாது, சங்கங்களுக்கும் இப்பிரச்னை பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us