sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

/

மாணவி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

மாணவி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

மாணவி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

3


ADDED : மே 10, 2025 01:40 AM

Google News

ADDED : மே 10, 2025 01:40 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே மாயமான 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது, 9ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 26 ம் தேதி, தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்றபோது மாயமானார்.

இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். நேற்று மாணவியை 19 வயது இளைஞர் வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர். மாணவியிடம் நடத்திய விசாரணையில், 19 வயது இளைஞர் உட்பட 6 பேர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

சிறுமி மாயமான வழக்கை போக்சோ வழக்காக மாற்றி, செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர் மற்றும் 18 வயதிற்கு குறைவான 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us