sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 60 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை

/

தமிழகத்தில் 60 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை

தமிழகத்தில் 60 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை

தமிழகத்தில் 60 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை


ADDED : பிப் 04, 2024 01:49 AM

Google News

ADDED : பிப் 04, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்தி பேரவை சார்பில், தமிழகம், புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை, 60 நாட்கள், 35,000 கி.மீ., துாரம் பயணித்து நுாற்றுக்கணக்கான கிராமங்களில் வலம் வர உள்ளது.

சென்னையில் பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன்கூறியதாவது:

கோவை ஈஷா யோக மையத்தில், 30வது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச், 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

நான்கு ரதங்கள்

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நான்கு ரத யாத்திரைகள் கோவையில் உள்ள ஆதியோகி முன், ஜன., 5ல் துவங்கின. மார்ச் 8 வரை இரண்டு மாதங்களில், நுாற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன.

அந்த வகையில், தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் வருகிறது.

சென்னையில் பிப்., 21ல் தொடங்கி மார்ச், 7 வரை அம்பத்துார், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது.

திருவள்ளூரில் பிப்., 22, செங்கல்பட்டில் மார்ச், 4ல் ரதங்கள் வலம் வர உள்ளன. மார்ச், 8ல், மஹாசிவராத்திரி நாளன்று, கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள்சென்றடையும்.

ஏழு தேர்கள்

இதனுடன் சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும், சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய ஏழு தேர்களை இழுத்தபடி, ஏழு குழுக்களாக வருகின்றனர்.

பிப்., 16 அன்று தொடங்கப்படும் இந்த யாத்திரை மார்ச், 6ல், கோவை ஈஷா யோக மையத்தில் முடிவடையும். தமிழகத்தில், 36 இடங்களில் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us