sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

/

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

4


ADDED : டிச 14, 2024 12:08 PM

Google News

ADDED : டிச 14, 2024 12:08 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (டிச.,14) பகல் 12 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியது. இதனால் முதல்கட்டமாக நேற்று காலை முதல் ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை நீர் திறப்பின் அளவு 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிச.,14) பகல் 12 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டது.

திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us