UPDATED : ஏப் 04, 2025 07:23 PM
ADDED : ஏப் 04, 2025 04:13 PM

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிகாரி - புதிய பணியிடம்
விஜயேந்திர பிதாரி - சென்னை போலீசின் தலைமையிடத்து ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்
கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,
கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து துறை ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்/
சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,
சத்யப்பிரியா- போலீஸ் நலன் பிரிவு ஐ.ஜி.,
துரை- டிஐஜி அலுவலகம் தலைமையக டி.ஐ.ஜி.,
சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.,
சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி., பொறுப்பை கவனித்துக் கொள்வார் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.