ADDED : மே 24, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் நேற்று எட்டு மாவட்டங்களில், வெயில் 100 டிகிரியை தாண்டியது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தியில், தலா, 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, பாளையங் கோட்டை, துாத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஆகிய இடங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.