sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன.24ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு

/

ஜன.24ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு

ஜன.24ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு

ஜன.24ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு


ADDED : ஜன 21, 2024 06:22 AM

Google News

ADDED : ஜன 21, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜன.24ல் திறந்து வைக்கிறார். அன்று இம்மைதானத்தில் களம்காண 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அலங்காநல்லுார் அருகே ரூ.45 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவையொட்டி ஜன.24ல் முதல்வர் ஸ்டாலின் முன்னி லையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. அன்று முதல் ஜன.28 வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது திறப்பு விழா நாளான ஜன.24 அன்று ஒருநாள் மட்டுமே போட்டி நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரரகள் பதிவு ஆன்லைனில் துவங்கியது. ஜன.19 மதியம் துவங்கி ஜன.20 மதியம் வரை நடந்த இப்பதிவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

இத்தனை பேர் பதிவு செய்தாலும் ஆயிரம் முதல் 1200 காளைகள் வரையே போட்டியில் பங்கேற்கும். அதற்கேற்ப இரட்டைப்பதிவு, வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தில் பல பெயர்களில் பதிவு போன்றவை உட்பட அனைத்து மனுக்களையும் பரிசீலித்து தகுதியானவற்றுக்கு அனுமதி வழங்க உள்ளனர்.

அதேபோல வீரர்களும் 10 முதல் 12 சுற்றுக்களில் 500 முதல் 600 பேர் வரை களமிறங்கலாம் எனக்கூறப்படுகிறது.

போட்டிகளும் தொடர்ந்து 5 நாட்களாக நடத்தாமல், வாரம் ஒருமுறை சனி, ஞாயிறுகளில் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்துள்ளது. இதனால் தற்போதைய பதிவு முதல்வர் வரும் நாளில் மட்டும் களமிறங்கும் காளைகள், வீரர்களுக்கானது என்கின்றனர்.






      Dinamalar
      Follow us