sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

/

களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

1


UPDATED : ஏப் 18, 2024 12:49 PM

ADDED : ஏப் 18, 2024 12:33 PM

Google News

UPDATED : ஏப் 18, 2024 12:49 PM ADDED : ஏப் 18, 2024 12:33 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாளை (ஏப்.,19) தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இதற்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் தயாராக இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாளை (ஏப்.,19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தமிழகம் முழுவதும் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 44,801 ஓட்டுப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வரிசையில் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

950 வேட்பாளர்கள்


6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர். 39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

புகார்கள்


சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ.173.85 கோடி பணம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us