sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹீலியம் பலுானில் வானில் பறந்த 500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்

/

ஹீலியம் பலுானில் வானில் பறந்த 500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்

ஹீலியம் பலுானில் வானில் பறந்த 500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்

ஹீலியம் பலுானில் வானில் பறந்த 500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்


ADDED : அக் 01, 2024 01:49 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹீலியம் பலுானில் வானில் பறந்த

500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்

திருவண்ணாமலை, அக். 1-

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி'யை சேர்ந்த, 42 பேர் அடங்கிய மாணவ, மாணவியர் குழுவினர், 500 கிராம் எடையில், 25,000 ரூபாய் மதிப்பீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, சிறிய ரக செயற்கை கோளை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விட்டனர்.

'சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (சி.ஐ.டி) கல்லுாரி'யை சேர்ந்த, 42 மாணவ, மாணவியர் அடங்கிய குழுவினர், குறைந்த செலவில் செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தில், காற்றின் ஈரப்பதம், தட்பவெட்பநிலையை கண்டறிய, 25,000 ரூபாய் செலவில் தயாரித்த, 500 கிராம் கொண்ட சிறிய ரக செயற்கை கோளை கண்டுபிடித்து அதை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விடும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

இந்த பலுான், 20 கி.மீ., உயரம் வரை பறக்கும். அப்போது, அதிலுள்ள செயற்கை கோள் தொடர்ந்து, 3 மணி நேரம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும், காற்றில் உள்ள ஈரப்பதம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றை கண்டறியும். சி.ஐ.டி., கல்லுாரி மாணவர்களின் இந்த முயற்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us