sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

/

டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

18


UPDATED : நவ 13, 2024 10:17 PM

ADDED : நவ 13, 2024 06:09 PM

Google News

UPDATED : நவ 13, 2024 10:17 PM ADDED : நவ 13, 2024 06:09 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய தாய்க்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறி, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்தி விட்டு, வேகவேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற அந்த நபரை, அங்கிருந்த காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

பின்னர், இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார், விக்னேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து சென்றனர்.

டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், டாக்டர் பாலாஜி மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியரும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருமான டாக்டர் சேதுராஜன் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் (127(2), 132), 307, 506(II)) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட விக்னேஷை போலீசார் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை அக்., 27 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஒருநாள் வேலைநிறுத்தம்

கிண்டி மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு; நாளை மாலை 6 மணி வரை எமெர்ஜென்சி மருத்துவ சேவையை தவிர்த்து, மற்ற அனைத்து மருத்துவ சேவை பிரிவுகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது








      Dinamalar
      Follow us