நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள், 18 பேரை, கடந்த 2ம் தேதி, இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய, இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர்.
சில தினங்களுக்கு முன், அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தனர்.