sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

/

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

5


UPDATED : ஜூலை 12, 2025 06:50 AM

ADDED : ஜூலை 11, 2025 10:18 PM

Google News

5

UPDATED : ஜூலை 12, 2025 06:50 AM ADDED : ஜூலை 11, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட,'' என்று சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னையில் நடந்த, விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எல்லோரும் நண்பர்கள் தான். அப்போது நான் பேசும்போது, நான், ஓல்டு ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம்.

அதெல்லாம் ரொம்ப கஷ்டம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்' என்று கூறியிருந்தேன். அதே சமயம், 'அப்படியிருந்தாலும் ஓல்டு ஸ்டுடன்ட் தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட, என்றும் சொல்லலாம் என வந்துவிட்டு எல்லாரும் சிரித்ததில் நான் அதை சொல்ல மறந்து விட்டேன்.

இப்போது வரும்போது மனதில் மிஸ்டர் ரஜினிகாந்த் அந்த மாதிரி ஏதும் மிஸ்டேக் பண்ணி விடாதே, என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன்.

புத்தகம் படிக்கணும்

1996ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். இரண்டு, மூன்று முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசும்போது மஹாராஷ்டிராவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். பத்து மாடு இருக்கிறது. அங்கு நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். புத்தகங்களை படித்து விட்டு அங்கே இருக்க வேண்டும் என்பது ஆசை என்றார்.

அரசியலை, விட அவர் சொன்ன அந்த விஷயம் மண்டைக்குள் ஏறிடுச்சு. 1996ல் இருந்து நல்ல புத்தகங்கள் கிடைத்தால், ஓய்வுக்கு பிறகு, அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து நல்லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால், புத்தகங்களை படிக்கலாம் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.

வணங்குகிறேன்!

கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி, அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். ஜாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்; HATS OFF..உங்க காலில் விழுந்து வணங்குகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.






      Dinamalar
      Follow us