ADDED : அக் 07, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதி களில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடியுடன் கனமழை பெய்தது.
ஆரணி, அடையபுலம் பஞ்., கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி நாத், 16; பிளஸ் ௧ மாணவன். இதயநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இடியுடன் மழை பெய்த போது, மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டச் சென்றார்.
'
அப்போது பயங்கர சத்தத்துடன் இடி விழுந் தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஜித் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.