பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகத்தில் அச்ச உணர்வு: கவர்னர் ரவி
பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகத்தில் அச்ச உணர்வு: கவர்னர் ரவி
UPDATED : ஜன 22, 2024 11:07 AM
ADDED : ஜன 22, 2024 10:10 AM

சென்னை: பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு காணப்படுகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற ராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
பட்டாச்சாரியார் மறுப்பு
சென்னை, மேற்குமாம்பலம் கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறையை உணர்ந்ததாக கவர்னர் ரவி கூறியதற்கு, கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் முகங்களில் அச்சம் வெளிப்படவில்லை என பட்டாச்சாரியார் மோகன் கூறியுள்ளார்.