sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

/

கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

10


ADDED : ஜன 30, 2025 02:05 PM

Google News

ADDED : ஜன 30, 2025 02:05 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் பைக் மோதியதால், மன்னிப்பு கேட்ட மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்தார் வாலிபர். மாணவி புகாரை விசாரித்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். இவர், நேற்று 29ம் தேதி வழக்கம் போல பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். சற்று நிலை தடுமாறிய மாணவியின் பைக், அருகே வந்த வாலிபரின் பைக்கில் உரசியுள்ளது.

உடனே அந்த மாணவி, வாலிபரிடம், 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். ஆனால், அந்த வாலிபர், மாணவியை தொடர்ந்து விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி பேசினார். அப்போது, எதிர்பார்க்காத வகையில், மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியதால், உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைப் பார்த்த அந்த நபர், அங்கு இருந்து தப்பிச் சென்றார். மாணவி அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார், விசாரணை நடத்தினர்.

அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us