உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 03, 2026 12:50 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: இந்திய தனித்துவ அடையாள ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,வின் நேரடி கட்டுப்பாட்டில், நாடு முழுதும் 116 மாவட்டங்களில், ஆதார் சேவா கேந்திரா என்கிற பிரத்யேக மையங்கள் செயல் படுகின்றன.
தமிழகத்தில் தற்போது, சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஆதார் சேவா கேந்திரா செயல்படுகிறது.
இனி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஆதார் சேவா கேந்திராக்களை திறக்க திட்டமிடப் பட்டுள்ளது.
