ADDED : நவ 05, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திரவ எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, மின்சாரம் தயாரித்தால் அதிக செலவு ஏற்படும் என்பதால், சென்னை எண்ணுார் எரிவாயு மின் நிலையத்தில், 288 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னை எண்ணுாரில், மின் வாரியத்திற்கு, 450 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் இருந்தது. இது, ஆயுட்காலத்தை முடித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டதால், 2016 - 17ல் நிரந்தரமாக மூடப்பட்டது.
அந்த இடத்தில் ஒவ்வொரு அலகிலும் தலா, 18 முதல் 20 மெகா வாட் என, மொத்தம், 2,000 மெகாவாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. எரிபொருளாக, திரவ நிலை இயற்கை எரிவாயு பயன்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதிக செலவு காரணமாக திட்டம் கைவிடப்பட்டு விட்டது.