sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

/

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்


ADDED : ஜன 24, 2024 04:46 PM

Google News

ADDED : ஜன 24, 2024 04:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இது போன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியா- இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us