தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : மார் 11, 2024 08:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவி்க்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதம், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சமீபகாலமாக துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது மீனவர்களின் குடும்பத்தினருக்கு கவலை அளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் தாம் மதிப்பதால், அவர்களை விடுதலை செய்ய விரைவாகவும், தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

