sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

/

ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

23


UPDATED : ஆக 30, 2025 06:15 PM

ADDED : ஆக 30, 2025 06:05 PM

Google News

23

UPDATED : ஆக 30, 2025 06:15 PM ADDED : ஆக 30, 2025 06:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ‛‛அரசியல் நாகரிகம் தெரியாத நடிகர் விஜய், பிரதமர் மோடி பற்றி பேச அருகதை இல்லை. எனக்கு வரும் கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது,'' நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசினார்.

‛பொன் விலங்கு' படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். தொடர்ந்து ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர வேடம் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

இதில் ரஞ்சித் பேசியதாவது... ‛‛மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார். 2014ல் கோவையில் பிரதமரை அவர் சந்தித்தபோது பூனைக்குட்டி போல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்ததை மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல, தம்பி மறந்துவிட்டார். மூளையில் பிரச்னை இருக்கு.

மிஸ்டர் மிஸ்டர் என சொடக்கு போட்டு பிரதமர் மோடியை பேசுகிறார். நான் ஒரு வாக்காளன். ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யாரென்றால் அது மோடி தான். இன்றைக்கு உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரு தலைவர் மோடி.

அவரை கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓட்டால் குத்துவோம்''

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us