sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கூட்டணி தேவை; நடிகை கஸ்தூரி

/

தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கூட்டணி தேவை; நடிகை கஸ்தூரி

தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கூட்டணி தேவை; நடிகை கஸ்தூரி

தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கூட்டணி தேவை; நடிகை கஸ்தூரி

19


UPDATED : டிச 16, 2024 08:15 PM

ADDED : டிச 16, 2024 04:58 PM

Google News

UPDATED : டிச 16, 2024 08:15 PM ADDED : டிச 16, 2024 04:58 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தி.மு.க.,வை வீழ்த்த ஒருமித்த கூட்டணி தேவை என்று நடிகை கஸ்தூரி கூறி உள்ளார்.

சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

ஒரு மாதமாக நான் சந்தித்துக் கொண்டிருக்கும் வேறுபாடுகளால் என் வாழ்க்கை ரொம்ப மாறிபோய்விட்டது. அந்த மாற்றங்கள் குறித்து அண்ணாமலையிடம் பேசினேன். கொஞ்சம் அரசியலும் பேசி இருக்கிறோம். மொத்த அரசியலையும் பேசிய பிறகு, என்ன பேசினேன் என்பதை தெரிவிப்பேன்.

தமிழகத்தில் ஒரு புதிய காற்று வீசவேண்டும் என்றால் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் என்னை பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல முன்னேற்பாடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதையே எல்லாரும் நினைக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், இதை நம்புகிறேன்.

இளையராஜா ஒரு இசைக்கடவுள். கடவுளுக்கு கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரை கோவில் உள்ளே விட வில்லை என்ற பிரசாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எத்தனை காலம் தான் இதுபோன்ற பிரசாரத்தை முன்வைத்து ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

கருவறைக்குள் எந்த சாதியினரும் அவர் யாராக இருந்தாலும் உள்ளே செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டுமே போக முடியும். தமிழகத்தில் எந்த சாதியினரும் அர்ச்சகராக முடியும். அவ்வளவு தான் விஷயம். அவருக்கு(இளையராஜா) மரியாதை பண்ண வேண்டும், அங்கேயே நில்லுங்க என்று சொன்னார்கள். அவர் நிற்கிறார். இது தான் நடந்தது. ஆனால், இங்கே நில்லுங்க என்று சொல்லிட்டாங்க என்பது தான் பிரச்னையே.

இதை திரித்து, பேசும் இந்த வன்மபோக்கை கண்டித்து நவ.3ம் தேதியே நான் பேசினேன். இதையே தான் இப்போதும் பேசுகிறேன்.

இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.






      Dinamalar
      Follow us