sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டெண்டர் எடுக்காத இடங்களிலும் அடாவடி வசூல்

/

டெண்டர் எடுக்காத இடங்களிலும் அடாவடி வசூல்

டெண்டர் எடுக்காத இடங்களிலும் அடாவடி வசூல்

டெண்டர் எடுக்காத இடங்களிலும் அடாவடி வசூல்

2


ADDED : பிப் 10, 2024 12:25 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:25 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''விவசாய சங்க நிர்வாகிகளுக்கு வலை வீச ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என்றபடியே, படித்துக் கொண்டிருந்த நாளிதழை மடித்து வைத்தார் குப்பண்ணா.

''விபரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வரா இருக்கறச்சே, விவசாய சங்க தலைவர்களை அப்பப்ப அழைத்து பேசி, அவா மனநிலையை தெரிஞ்சுப்பார்...

''தற்போதைய தி.மு.க., ஆட்சியில், தங்களை கண்டுக்கவே மாட்டேங்கறா என்ற ஆதங்கம் விவசாய சங்கத்தினருக்கு இருக்கு ஓய்...

''ஏற்கனவே, தி.மு.க., வுக்கு ஆதரவா இருந்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து, போன சட்டசபை தேர்தல்ல அ.தி.மு.க., பக்கம் சாஞ்சுட்டார்...

''இப்ப, தி.மு.க.,வுக்கு ஆதரவா இருக்கற, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் தலைவர் இளங்கீரனையும் அ.தி.மு.க., பக்கம் இழுக்க, 'மாஜி' எம்.பி., ஒருத்தர் துாது போயிருக்கார்...

''அவரோ, 'விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்'னு சொல்லி, மாஜியை திருப்பி அனுப்பிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்கிட்ட ஒரு வசூல்மேட்டர் இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''சீக்கிரம் சொல்லும் வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காய்கறி மார்க்கெட், வ.உ.சி., பூங்கா வளாகத்துல செயல்படுது... இங்க, 700க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது பா...

''தி.மு.க.,வை சேர்ந்த அருண் என்பவர் ஏலம் எடுத்து, இந்த கடைகள்ல சுங்கம் வசூலிக்கிறாரு... அதே நேரம், அவர் டெண்டர் எடுக்காத சின்ன மார்க்கெட், சாலையோர கடைகள், கம்பங்கூழ் கடை, பழக்கடைகளையும் விட்டு வைக்காம, அடாவடி வசூல்ல ஈடுபடுறாரு பா...

''சாலையில நடந்து போய் பலுான், கொசு வலை விற்குறவங்க, ஐஸ் வண்டிக்காரங்களைக் கூட விடாம துரத்தி, துரத்தி வசூல் பண்ணுறாரு... 'இவரது அடாவடியை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுக்கிறது இல்லை'ன்னு, கடைக்காரங்க எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.






      Dinamalar
      Follow us