கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து
கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து
ADDED : ஜன 29, 2026 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரித்தது தொடர்பான விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டது குறித்து, கடந்தாண்டு ஜூனில், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவன், 'என்னை யாரும் கடத்தவில்லை' என, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப் பட்டு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை, அரசு ரத்து செய்துள்ளது. வரும் மே மாதம், அவர் ஓய்வுபெற உள்ளார்.

