sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

/

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,


ADDED : பிப் 18, 2024 05:21 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அதிநவீன தொழில்நுட்ப ரீதியான தடயவியல் பகுப்பாய்வு கருவிகளை கையாள, பொறியியல் படித்த போலீசாரை அனுப்புமாறு, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சென்னை, அசோக் நகரில், போலீஸ் பயிற்சி கல்லுாரியில், மாநில சைபர் கிரைம் குற்றப்பிரிவு செயல்படுகிறது. அங்குள்ள ஆய்வகத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக செய்யப்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப தடயவியல் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை கையாள, பி.இ., - பி.டெக்., - எம்சிஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., மற்றும் கணினி அறிவியல் படித்துள்ள போலீசாரை, அயல் பணி என்ற அடிப்படையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, வரும் 20ம் தேதிக்குள், மாநில சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us