ADDED : ஆக 26, 2026 03:15 AM
சென்னை: 'ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, நாளை பத்திரப்பதிவுக்கு, கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட அறிக்கை:
முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில், பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும்.
இதை கருத்தில் வைத்து, விசேஷ நாட்களில் கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும், சார் - பதிவாளர் அலுவலகங்களில், 300 டோக்கன்கள்; 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
