தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்

 பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்

 பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்


ADDED : நவ 26, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால், நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் முகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பத்திரப்பதிவுக்கு வருகின்றனர். வழக்கமான எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும், 'டோக்கன்'கள் இதற்கு போதுமானதாக இருப்பதில்லை.

எனவே, பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை அதிக பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, வழக்கமான நாட்களில், 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை, 150 டோக்கன்கள்; 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில் நாளை, 300 அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us