sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவன் கையில் லேப்டாப், திமுக ஆட்சியிலோ கஞ்சா; இபிஎஸ் விளாசல்

/

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவன் கையில் லேப்டாப், திமுக ஆட்சியிலோ கஞ்சா; இபிஎஸ் விளாசல்

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவன் கையில் லேப்டாப், திமுக ஆட்சியிலோ கஞ்சா; இபிஎஸ் விளாசல்

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவன் கையில் லேப்டாப், திமுக ஆட்சியிலோ கஞ்சா; இபிஎஸ் விளாசல்


ADDED : பிப் 03, 2026 07:45 PM

Google News

ADDED : பிப் 03, 2026 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆட்சியாளராக முதல்வர் ஸ்டாலின் தோற்று விட்டார் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?

ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப்படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு. கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், திமுக அரசு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.

இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல 'ஓ' போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us