sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

/

அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

8


ADDED : நவ 18, 2024 04:03 PM

Google News

ADDED : நவ 18, 2024 04:03 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லை: வரும் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

நிருபர்கள் சந்திப்பு என்றாகட்டும், பொதுக்கூட்ட மேடை ஆகட்டும். தமது பேச்சில் அனல் பறக்க, அதிரடியாக பேசுபவர்களில் ஒருவர் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நடிகர் விஜய் பற்றியும், 2026 தேர்தலில் த.வெ.க., தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சி அமைக்க தயாராகி வருவதாக வெளியான அறிக்கை பற்றியும் நெல்லையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளதாவது;

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் அருமையான, வலுவான, வல்லமையான, தெளிவான, வெல்லப் போகும் கூட்டணி தெளிவாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை இ.பி.எஸ்., எடுப்பார்.

இ.பி.எஸ்., உத்தரவை சரியாக செயல்படுத்துபவர்கள் நாங்கள். ஆகவே அவர் தான் முடிவை எடுப்பார். நாங்கள் ரெய்டுக்கு எல்லாம் பயந்து போகிறவர்களா? வ.உ.சி., நேதாஜி வரலாற்றை படித்து வளர்ந்து கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள். ஆகவே, ரெய்டுக்கும், கைதுக்கும் பயந்து பின்வாங்குபவர்கள் அ.தி.மு.க.,வினர் கிடையாது.

அ.தி.மு.க., ஆட்சி மலரும். நாட்டு மக்கள் போற்றக்கூடிய ஆட்சி, அரசியல் தலைவர்களை மதிக்கக்கூடிய ஆட்சி. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தக்கூடிய அற்புதமான ஆட்சி இ.பி.எஸ்., தலைமையில் விரைவில் அமையும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.






      Dinamalar
      Follow us