sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

/

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

4


ADDED : மே 16, 2025 09:50 PM

Google News

ADDED : மே 16, 2025 09:50 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு அருகே கிழிந்த நிலையில் விவரங்கள் கிடந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்தீஷ் யார் என்று அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க., சார்பில் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது;

டாஸ்மாக் எம்.டி., வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் தி.மு.க.,வின் புதிய Power Center-ஆ?

Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us