தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓ.பி.எஸ்., இல்லாமலேயே அ.தி.மு.க., நிலைத்துவிட்டது

ஓ.பி.எஸ்., இல்லாமலேயே அ.தி.மு.க., நிலைத்துவிட்டது

ஓ.பி.எஸ்., இல்லாமலேயே அ.தி.மு.க., நிலைத்துவிட்டது


ADDED : ஏப் 24, 2025 09:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 09:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., ஆட்சியில், பெண்கள் உயிரோடு வாழ்வதே சாதனைதான். இங்கு, பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன.

சமூக ஆர்வலர்கள் மீதும், தி.மு.க., கட்சியின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் சவுக்கு சங்கர் போன்றோர் மீதும், நடவடிக்கை எடுக்கும் காவல் துறை, பொன்முடி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மகளிருக்கு சிறு பிரச்னை என்றால் ரோட்டுக்கு வந்த, தி.மு.க., கூட்டணி கட்சியின் மகளிர் அமைப்புகள், கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதி காக்கின்றனர்;

சசிகலா, ஓ.பி.எஸ்., ஆகியோர் இல்லாமலேயே, அ.தி.மு.க., நிலைத்து விட்டது.

த.வெ.க., தலைவர் விஜயை, அரசியல் தலைவராக பார்க்கவில்லை. இங்கு சினிமா சூட்டிங் எடுக்கப்படவில்லை. நடப்பது எல்லாமே அரசியல்.

விந்தியா, மகளிரணி இணைச்செயலர், அ.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us