sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கட்சியில் ஆட்கள் இருப்பதை அறிய அ.தி.மு.க.,வில் விருப்ப மனு: அமைச்சர் ரகுபதி கிண்டல்

/

 கட்சியில் ஆட்கள் இருப்பதை அறிய அ.தி.மு.க.,வில் விருப்ப மனு: அமைச்சர் ரகுபதி கிண்டல்

 கட்சியில் ஆட்கள் இருப்பதை அறிய அ.தி.மு.க.,வில் விருப்ப மனு: அமைச்சர் ரகுபதி கிண்டல்

 கட்சியில் ஆட்கள் இருப்பதை அறிய அ.தி.மு.க.,வில் விருப்ப மனு: அமைச்சர் ரகுபதி கிண்டல்

1


ADDED : டிச 16, 2025 07:21 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: ''அ.தி.மு.க.,வில் யாரும் கட்சியை விட்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குகின்றனர்,'' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வில் முன்கூட்டியே விருப்ப மனுவை வாங்கி, அவர்கள் கட்சியில், தேர்தலில் நிற்பதற்கு ஆட்கள் இருக்கின்றனரா என பார்க்கின்றனர்.

மேலும், கட்சியை விட்டு யாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குகின்றனர். இதுதான் அ.தி.மு.க.,வில் விருப்பமனு வாங்குவதற்கு அடிப்படை காரணம்.

அமித் ஷா, மோடி ஆகியோர், தங்கள் கட்சியின் டிபாசிட்டையாவது காப்பாற்றிக் கொள்ள, தமிழகத்துக்கு இனி படையெடுத்து வரத்தான் வேண்டும். ஆனால், பீஹார் வேறு, தமிழகம் வேறு. தமிழகத்தில் வேறு எந்த இயக்கமும் காலுான்ற முடியாது.

ஆரம்ப காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஊட்டி வளர்த்த பூமி. ஆன்மிக அரசியலை சொல்லி ஏமாற்ற முடியாது.

நாங்கள் ஆன்மிக அரசியலுக்கு எதிரிகள் அல்ல. எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் கொள்கை. யாரிடமும் எதிர்ப்பு, வெறுப்பு தெரிவிக்கும் கட்சி தி.மு.க., கிடையாது.

தமிழகத்தில் தி.மு.க., அரசு வந்த பின் தான், சுகாதார துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்த துறைக்கு பெயின்ட் மட்டுமே அடித்தார்; வேறு எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us