sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கள்ளக்குறிச்சியில் ஜன.,5ல் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம்

/

 கள்ளக்குறிச்சியில் ஜன.,5ல் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம்

 கள்ளக்குறிச்சியில் ஜன.,5ல் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம்

 கள்ளக்குறிச்சியில் ஜன.,5ல் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம்


ADDED : ஜன 01, 2026 02:03 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சியில், வரும் 5ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட மகளிரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக, வரும் 4ம் தேதி, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார். 5ம் தேதி, கள்ளக்குறிச்சியில் நடக்கும், மாவட்ட மகளிரணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் 5 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன' என்றார்.

அதற்கு பதிலளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து, நான் பதில் அளிக்க தயார். தி.மு.க., ஆட்சி குறித்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முதல்வர் தயாரா. என்னுடன் மேடையேறி விவாதிக்க தயாரா' என சவால் விட்டார்.

கள்ளக்குறிச்சி அரசு விழா, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே வார்த்தை போராக மாறியதால், பல்லடம் தி.மு.க., மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பேசியவற்றுக்கு பதிலடி கொடுத்து, கள்ளக்குறிச்சியில் நடக்கும் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டத்தில், பழனிசாமி பேசுவார் என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us