sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமான நிலைய வான்தடம் பல இடைவெளியில் மூடல்

/

விமான நிலைய வான்தடம் பல இடைவெளியில் மூடல்

விமான நிலைய வான்தடம் பல இடைவெளியில் மூடல்

விமான நிலைய வான்தடம் பல இடைவெளியில் மூடல்

3


ADDED : அக் 01, 2024 03:26 AM

Google News

ADDED : அக் 01, 2024 03:26 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதால், விமானங்கள் இயக்கம் அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பயணியருக்கு, சென்னை விமான நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

விமான நிலையம் அறிக்கை:


இந்திய விமானப் படை தினத்தையொட்டி, தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில், விமான கண்காட்சி நடக்க உள்ளது. இதன் காரணமாக, அக்., 1 முதல் 8ம் தேதி வரை, சென்னை விமான நிலைய விமான பயண அட்டவணையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சி காரணமாக, சென்னை விமான நிலைய வான்தடம், 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை, பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும்.

அக்., 1ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 3:15 மணி வரை மூடப்படும். மற்ற நாட்களில், கூடுதல் இடைவெளிகள் இருக்கும்.

எனவே, விமானப் பயண அட்டவணைகளை பயணியர் சரி பார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு, அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும். பயணியர் தங்கள் ஒத்துழைப்பை அளிக்கவும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us