sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

/

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

6


UPDATED : ஜூலை 19, 2025 07:26 PM

ADDED : ஜூலை 19, 2025 05:02 PM

Google News

6

UPDATED : ஜூலை 19, 2025 07:26 PM ADDED : ஜூலை 19, 2025 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில், இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலை மற்றும் அஜித் குமார் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 28ல் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் இன்று (ஜூலை 19) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நேற்று மதுரையில் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, பிரவீன், உள்ளிட்டோர் இடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று ( ஜூலை 19) திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில், 5 கார்களில் வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு விசாரணை நடத்தியது.

அஜித் குமாரின் தம்பி நவீன்குமார், வினோத் , பிரவீன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். அஜித்குமாரின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், அஜித் குமாரை போலீசார் உணவு வாங்கி கொடுக்க அழைத்து சென்ற இடம் மற்றும் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருப்பம்

இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் பதிவெண் பற்றி சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2 போலி நம்பர் பிளேட் இருந்தது தெரியவந்துள்ளது. TN01G0491 என்ற பதிவெண்ணுக்கு பதில், TN 63 G 0491 என்ற பதிவெண் கொண்ட ஸ்டிக்கர் பயன்படுத்தி உள்ளனர். அஜித்குமாரை அழைத்துச் சென்ற டெம்போ வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us