sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'

/

'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'

'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'

'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'

8


ADDED : செப் 13, 2024 04:43 AM

Google News

ADDED : செப் 13, 2024 04:43 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: ''மதவாத கட்சியான பா.ஜ., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க., ஆகிய கட்சிகள், வி.சி., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அது அவருடைய கருத்து; ஆனால், அவருக்கெல்லாம் முன்பாகவே பா.ம.க., தான் தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மது ஒழிப்பு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பா.ம.க.,தான். கடந்த 44 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு வேண்டி பா.ம.க., போராடி வருகின்றது.

கடந்த 35 ஆண்டுகளில் 32 மாவட்டங்களில் மதுவை ஒழிக்கும் வகையில் மகளிர் மாநாட்டை நடத்தியுள்ளோம். இதில் அனைத்து சமுதாய தவைர்களை அழைத்தோம். முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து, மது ஒழிப்பை அமல்படுத்த கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் டாஸ்மாக் துவக்கி, 7,200 கடைகள் திறக்கப்பட்டன. அவற்றை 6,800 கடைகளாகக் குறைத்த பெருமை பா.ம.க.,வை சேரும்.

உச்ச நீதிமன்றம் வரை போராடி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 3321 மதுக்கடைகளை மூட வைத்தது பா.ம.க.,தான். டாஸ்மாக் நேரம் காலை 8.00 முதல் இரவு 12.00 மணி வரை 16 மணி நேரமாக இருந்ததை, 10 மணி நேரமாகக் குறைத்ததும் பா.ம.க.,தான்.

கடந்த 2016ல், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்த பின்னரே, தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் அதை அறிவித்தன. இவ்வாறு அவர் கூறினார்.

நிதிக்காக தமிழக அரசு வழக்கு போட வேண்டும்


ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடி நிதியை, இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை திறக்கவும், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதற்கு தமிழக அரசு மறுத்து வருகின்றது. இதற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தியது சரியல்ல.
தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிதியை பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சீன பூண்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி தற்போது விற்பனை செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,








      Dinamalar
      Follow us