sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

/

 சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

 சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

 சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

11


ADDED : ஜன 02, 2026 06:39 AM

Google News

11

ADDED : ஜன 02, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது : விடியல் தரப்போகிறார் என ஒருவரை சொன்னார்கள். ஐந்தாண்டுகளாகி விட்டது. விடியல் தான் வரவில்லை. புலம்பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருத்தணியில் ஜமால் என்பவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழகத்தில் போதை மட்டுமே உள்ளது. திராவிட இயக்கத்தை தொடங்கும் போது பிராமண சமூகத்தை வந்தேறி என்றார்கள். பிறகு வட இந்தியர்களை கூறினர்.

அதன் பின்பு பா.ஜ., தமிழகத்திற்குள் வந்துவிடும் என பூச்சாண்டி காண்பித்தார்கள். தற்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை வடக்கன், பீடா வாயன் என அமைச்சர்களே பேசுகிறார்கள். அவன் நம்ம ஆள் இல்லை என்ற விஷத்தை பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்கள். தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை.

தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் கிடைக்கின்றன. கேட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது எனக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினி, இன்று என்ன சொல்கிறார்.

தமிழகத்தில் ஜீரோ சதவீதம் தான் கஞ்சா உள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். ஆனால் உயர்வகை கஞ்சா கிலோ கிலோவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிடித்திருக்கிறார்கள். 'யார் அந்த சார்' என்று கேள்விக்கு 'யாருமே இல்லை' என்று சொன்னார்கள். இப்போது 'எங்கே அந்த கஞ்சா' என்று கேட்டால், 'எங்கேயும் இல்லை' என்று தான் சொல்வார்கள் என்றார்.

ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சக்திவேல், பா.ஜ., மாவட்ட தலைவர் சிவலிங்கம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us