sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'

/

தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'

தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'

தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'

21


ADDED : மே 11, 2025 08:03 AM

Google News

ADDED : மே 11, 2025 08:03 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: ''தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் வேதனையானவை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியா--பாகிஸ்தான் பிரச்னை நீண்டகாலமாகஇருந்து வருகிறது. தொடர்ந்து அத்துமீறி வரும் பாக்., மீது அறத்தின் அடிப்படையில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன்களை நம் நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பாக்., தீவிரவாதிகள் செய்த தவறுக்கு, அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம். ஆனால், பாக்., நம் நாட்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காகவும் சண்டை போடவில்லை.

நம் நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம். நம் நாட்டின் நடவடிக்கையை பார்த்த பின், ஓர் உயிரை எடுப்பதற்கு பாக்., பயப்பட வேண்டும்.இந்திய ராணுவ வீரர்களுக்காக, முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது.

இந்த நேரத்தில் முழு ஒத்துழைப்பை, அவர் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடத்திய நான்கு ஆண்டுகளும் வேதனையானவை. பொருளாதாரத்தில் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us