sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழில், மலிவு விலையில் அம்பேத்கர் நுால்கள்!

/

தமிழில், மலிவு விலையில் அம்பேத்கர் நுால்கள்!

தமிழில், மலிவு விலையில் அம்பேத்கர் நுால்கள்!

தமிழில், மலிவு விலையில் அம்பேத்கர் நுால்கள்!


ADDED : பிப் 18, 2024 02:27 AM

Google News

ADDED : பிப் 18, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அம்பேத்கர் நுால்களை, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், எளிய தமிழில் மொழிபெயர்த்து, மலிவு விலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் படைப்புகளை, எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது; அரசாணையும் வெளியானது. இதைத் தொடர்ந்து, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து, 'அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்' என்ற தலைப்பில், 60 தொகுதிகளாக வெளியிட முன்வந்துள்ளது.

அம்பேத்கர் நுால்களை, எளிய தமிழில் வெளியிடும் திட்டத்தை செயல்படுத்த, சூலுார் பாவேந்தர் பேரவை தலைவர் செந்தலை கவுதமன், எழுத்தாளர் அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் வளர்மதி, கல்லுாரி கல்வி இயக்கக முன்னாள் துணை இயக்குனர் மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் தலைமையில், சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், அம்பேத்கரின் ஆக்கங்களில், இதுவரை அச்சில் வெளிவராத, நுால் வடிவில் கிடைக்காத, பிற அரிய செய்திகளையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடுவது; ஒவ்வொரு தொகுதியும், 300 பக்கங்கள் உடையதாக அமைத்து, ஒரு தொகுதியை 100 ரூபாய்க்கு மிகாமல் விற்பது என, முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us