sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

/

பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

9


ADDED : மே 30, 2025 07:25 AM

Google News

ADDED : மே 30, 2025 07:25 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய பகீர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

பா.ம.க.,வில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வந்த உட்கட்சி பூசல் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., இளைஞரணி தலைவர் முகுந்தன் நியமனம், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு, பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அன்புமணிக்கு எதிராக முன் வைத்தார்.

கண்கலங்கிய நிலையில் தைலாபுரத்தில் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டி அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில், உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை இன்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை சோழிங்கநல்லூரில் மாவட்டம்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 30) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது நிர்வாகிகளுடன அவர் ஆலோசனை நடத்துவார்.

கட்சியில் தமக்கான இடம் எது என்பதையும், பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பதிலளிக்கும் விதமாகவும் அவர் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. 2026 தேர்தல் கூட்டணி, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் நிர்வாகிகள் கருத்தை கேட்டறிவார்.

3 நாட்கள் தீவிர ஆலோசனைக்கு பின்னர் தமது இறுதியான நிலைப்பாட்டை அன்புமணி அறிவிப்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us