sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

/

 ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

 ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

 ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்


ADDED : பிப் 15, 2026 03:45 AM

Google News

ADDED : பிப் 15, 2026 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் போட்டித்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 3,274 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடந்து ஏழு மாதங்களாகின்றன.

இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து, பணி நியமன ஆணை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.

ஆனால், எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பின், இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல.

போட்டித்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட்டு, தகுதியானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us