sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு; அழுகிய முட்டை விஜய் கொள்கை: சீறி பாய்கிறார் சீமான்

/

முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு; அழுகிய முட்டை விஜய் கொள்கை: சீறி பாய்கிறார் சீமான்

முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு; அழுகிய முட்டை விஜய் கொள்கை: சீறி பாய்கிறார் சீமான்

முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு; அழுகிய முட்டை விஜய் கொள்கை: சீறி பாய்கிறார் சீமான்

54


UPDATED : நவ 02, 2024 10:03 PM

ADDED : நவ 02, 2024 12:22 AM

Google News

UPDATED : நவ 02, 2024 10:03 PM ADDED : நவ 02, 2024 12:22 AM

54


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''குட்டிக்கதை சொல்ல வரவில்லை நான். வரலாற்றைக் கற்பிக்க வந்தவன்,'' என்று கூறிய சீமான், ''திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல,'' என்று விஜய் பெயர் குறிப்பிடாமல் போட்டுத்தாக்கினார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், 'திராவிடமும் தமிழ் தேசியமும் தான் எங்கள் கொள்கை' என்று அறிவிப்பு வெளியிட்டார். அது மட்டுமின்றி, 'ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா' என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார்.சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் விஜயின் அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த சீமானுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

மாநாடு நடந்த அன்று கருத்து கூறிய சீமான், 'திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது' என்று கூறி அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், விஜய் அறிவித்த கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார் சீமான். அவரது பேச்சின் பெரும்பகுதி, விஜயை கிண்டல் செய்து மட்டம் தட்டும் வகையில் இருந்தது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

கழிப்பிடம், மது குடிப்பிடத்தை தவிர, எல்லா இடங்களுக்கும், கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வருகிறது. மது குடிப்பிடம்தான் அவர் பெயர் வைப்பதற்கு சிறந்த இடமாக இருக்கும். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல.

சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது.

கொள்கை அல்ல அழுகிய கூமுட்டை


காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல; அது, அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவேண்டும்; நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய்.

இனிதான் நீங்கள் படிக்க வேண்டும்


' தம்பி ' நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பட்டம் பெற்று பிஎச்டி வாங்கி விட்டோம்.

பஞ்ச் டயலாக் அல்ல, நெஞ்சு டயலாக்


நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியம் எங்கு இருக்கிறது? என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன் நெடுஞ்செழியனின் பேரன்களும், பேத்திகளும் நாங்கள். அது கதை இல்லை தம்பி. என் இன வரலாறு. எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை. தம்பி நான் பேசுறது பஞ்ச் டயலாக் அல்ல தம்பி, நெஞ்சு டயலாக்.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ' ப்ரோ' இது ட்ரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு தான் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால்வரும்?

தமிழகத்தில், 75வது ஆண்டு பொன் விழா கொண்டாடும் கட்சிக்கு, திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல தெரியவில்லை.

இவ்வாறு சீமான் பேசினார்.

திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை பல்வேறு உதாரணங்களை காட்டி சீமான் பேசினார்.






      Dinamalar
      Follow us