sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்'

/

'தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்'

'தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்'

'தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்'

7


ADDED : மே 28, 2024 06:23 AM

Google News

ADDED : மே 28, 2024 06:23 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''காங்கிரஸ், தி.மு.க., இடம் பெற்றுள்ள, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கனவு உலகத்தில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு வரும், 4ம் தேதி தகர்க்கப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

லோக்சபா தேர்தலுக்கு பின் முதல் முறையாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது.

மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: இம்முறை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும். நாடு முழுதும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். தென் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பின் வடக்கு, தெற்கு என்ற வாதம் இருக்காது.

காங்கிரஸ், தி.மு.க., இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி கட்சிகள் கனவு உலகத்தில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு, அடுத்த மாதம் 4ம் தேதி தகர்க்கப்படும். பா.ஜ.,வினர் கொண்டாட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார். இது, காலத்தின் கட்டாயம். நாட்டை எதிர்க்கும் ஆதிக்க சக்திகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுக்கு பின் மேலே இருப்பவர்கள், கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே செல்லலாம்.

அதைப்பற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம். இனி அடுத்து கொடுக்க போகும் வேலையையும் செய்து முடிப்போம்.

எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பது முக்கியமல்ல.

எவ்வளவு ஓட்டு சதவீதம் பெறப் போகிறோம் என்பது தான் முக்கியம். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக உழைத்து தான் உயர்ந்துள்ளனர்.

அதேபோல் நாமும் உழைத்தால், நம் இலக்கை அடைய முடியும். தேர்தலில் சரிவர பணியாற்றாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். தேர்தல் முடிவுக்கு பின், அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us