sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

/

அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

7


ADDED : ஜூன் 06, 2025 06:09 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:09 AM

7


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கை பணத்தையும் சுரண்டி கொண்டிருக்கும் கூட்டம், இன்று மக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை எனக் கூறும் அளவுக்கு கொழுத்து போயிருக்கிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் நெரிசலால் ஏற்பட்ட விபத்து குறித்து கேட்ட கேள்விக்கு, 'கோவில் திருவிழாக்களுக்கு அதிக கூட்டம் செல்வது, விளையாட்டை பார்க்க அதிக கூட்டம் செல்வது, நாகரிகமான சமூகத்திற்கு ஒரு அடையாளமாக என்னால் பார்க்க முடியவில்லை' என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.

அதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாக தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, 'மக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது' என, அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து உள்ளார்.

கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் உண்டியல் பணத்தையும் சுரண்டி கொண்டிருக்கும் கூட்டம், இன்று மக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்றும் கூறும் அளவுக்கு கொழுத்து போயிருக்கிறது.

எது நாகரிகம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பாலில் இருந்து கொழுப்பு சத்தைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா?

'இண்டி' கூட்டணி கட்சியின் நிர்வாக தோல்வியை மறைக்க, மக்கள் கூட்டமாக கோவில் திருவிழாவுக்கு செல்லக்கூடாது எனக் கூறும் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளை கூட்டி கூட்டம் போடும் தன் கட்சி தலைவரிடம் இப்படி சொல்வாரா?

தமிழகத்தில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும், போதை பொருளும் ஆறாக ஓடிக் கொண்டிக்கின்றன. கொலை நடக்காத நாளே இல்லை என்றளவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், அமைச்சர் பகுத்தறிவு பேசுகிறாராம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us